Sunday 2 March 2014

ப்ளே/ ப்ரீ ஸ்கூல்



எல்லோரும் வரப்போகும் தேர்தலில் யாருக்கு சீட் என்று விவாதித்துக் கொண்டிருக்கும் போது நான் முக்கியமான எல்கேஜி சீட்டுக்காக அலைந்துக்கொண்டிருந்தேன். 
காலேஜ் சீட் கிடைப்பது கூட பெரிய விஷயமில்லை. இந்த படிப்பு இல்லை என்றால் வேற படிப்பு படிக்கலாம். எல்கேஜியை அப்படி புறக்கணிக்க முடியாதல்லவா?இதற்கான தயாரிப்புகள் ப்ளே/ப்ரீ ஸ்கூல்களிலேயே ஆரம்பமாகிவிடுகின்றன. 

மூன்றரை வயதுக்கு மேல் பிள்ளையை வீட்டில் வைத்திருந்தால் நம்மை ஏதோ கொலைக் கேசில் பெயிலில் வந்தவரை போலவே பார்க்கும் சமூகம். இன்னுமா ஸ்கூல்ல போடல என்று நம் பிள்ளைக்கு ஏதோ  அவர்கள் தான் ஸ்கூல் பீஸ் கட்டப்போவதைப்  போல போக வர விசாரித்துக்கொண்டே இருப்பார்கள். இந்த பிரச்சனைக்கு இடமே கொடுக்காமல் இரண்டு, இரண்டரை வயதிலேயே ப்ளே ஸ்கூலில் விட்டுவிடுகின்றனர்.பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் வீடுகளில் க்ரெஷுக்கு  அடுத்த வரப்ரசாதமாக பார்ப்பது ப்ளே ஸ்கூல்களைத்தான்.

குழந்தையை ப்ளே/ப்ரீ  ஸ்கூலில் விட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். கூட்டிக் கழித்துப் பெருக்கி துடைத்துப் பார்த்தால் எல்லா நிலைகளிலும் குழந்தையின் நலனை விட பெற்றோரின் சுயநலம் தான் அடிப்படையாக உள்ளது புரியும். 

முழு முதற்காரணம் பெற்றோருக்கோ இல்லை குழந்தையைப் பார்த்துக் கொள்பவருக்கோ கிடைக்கும் இரண்டு மணி நேர விடுதலை.இரண்டு மணிநேரத்துக்கு மேல் ப்ளே ஸ்கூலில் இந்த சின்னப்பிள்ளைகளை  வைத்திருப்பதும் கடினம். அக்கம் பக்கம் சிறிய பிள்ளைகள் போகும் போது நம்ம பிள்ளையும் போகட்டுமே என்று சேர்ப்பவர்களே அதிகம். 

இரண்டாவது காரணம் +2 சிலபஸ்ஸை +1 னிலேயே பிள்ளையை மாங்குமாங்கென்று படிக்க வைப்பது போல எல்கேஜி,யுகேஜியில் படிக்க வேண்டியதை பிள்ளை இரண்டரை வயதிலேயே கற்று வந்து அக்கம் பக்கம், உற்றார், உறவினர், நண்பர் முன்னர் பேசியோ பாடியோ காட்டினால் பெற்றோருக்கு கிடைக்கும் பெருமிதம்.கண்ணா, மாமாவுக்கு அந்த ரைம்ஸ் சொல்லு அக்காவுக்கு இந்த பாட்டு பாடு என்று ஒரு நாள் முழுக்க பாடாய்படுத்தப்பட்ட குழந்தை ஒன்று அந்த நாளின் முடிவில் வீட்டுக்கு வந்த விருந்தினரை பார்த்து போடா பன்னி என்று சொன்னதாக முகநூலில் படித்த ஞாபகம்.  பாவம் எவ்வளவு முறை தான் அதுவும் செய்ததையே செய்து காட்டும்? 

அடுத்த வருடம் குழந்தை ரெகுலர் பள்ளியில் சேர்க்கும் பொழுது அழுது  அடம்  பிடிக்காமல் இருக்கவும்,பெற்றோரை விட்டு அரை நாள் வேறு ஒரு புது இடத்தில் கழிக்கவும்,மற்ற  குழந்தைகளோடு  சேர்ந்து  விளையாடிப் பழகவுமே  இந்த  
ப்ளே-ஸ்கூல்,ப்ரீ-ஸ்கூல் மண்ணு மண்ணாங்கட்டி  எல்லாம். ஆனால் இந்த நியாயமான காரணங்களுக்காக ப்ளே ஸ்கூல்லில் சேர்ப்பவர்கள் வெகு சிலரே. 

எல்லாமே வியாபாரமாக ஆகிவிட்ட இன்றைய உலகில் பெற்றோர்களின் பலவீனத்தை மிக அருமையாக பயன்படுத்தி ஏகப்பட்ட ப்ளேஸ்கூல்கள் காளான் போல முளைத்துக்கிடக்கின்றன. செமத்தியான லாபம் தரும் இந்த ப்ளே ஸ்கூல் வியாபாரத்தையும் விட்டு வைக்கவில்லை பெரிய பள்ளிகள். ப்ளே ஸ்கூல்களையும் தாங்களே ஆரம்பித்து அதற்கு ஒரு கோட்டாவும் ஒதுக்கி விட்டன.  சிப்லிங்க் கோட்டா, RTE கோட்டா, வடநாட்டவருக்கான கோட்டா போன்ற ஏகப்பட்ட கோட்டாக்களோடு   ப்ரீஸ்கூல் அங்கேயே படித்த கோட்டாவும் சேர்த்தி. ப்ளே/ப்ரீ ஸ்கூல்களில் குழந்தைகளை சேர்க்க மூன்றாவது   முக்கிய காரணம் இது. 

ப்ளே ஸ்கூல் ஆரம்பிக்க பெரிய உள்கட்டமைப்பு வசதிகள் தேவை இருப்பதில்லை. ஒரு பெரிய இன்டிபென்டென்ட் பங்களா இருந்தால் போதுமானது. பங்களா என்றால் நிச்சயம் கீழே ரெண்டு மேலே ரெண்டு பெட்ரூம், அதோடு கூட அட்டாச்டு பாத்ரூம், ரெண்டு கார் பார்க்,ஒரு குட்டி லான் (lawn) இதெல்லாம் கட்டாயம் இருக்கும். போதாதா? நாலு கிளாஸ் ரூம் கூட  நாலு  டாய்லெட்.ஒரு குட்டி  சறுக்கல் மற்றும் சீசாவோடு  கூடிய சிறிய  விளையாட்டு ஏரியாவாக  மாறிய  கார் பார்க்கும் லானும்.இல்லவே இல்லாத காலேஜிக்கு ரெகக்னிஷன் தரும் நம் நாட்டில் ப்ளே ஸ்கூலுக்கு பெர்மிஷன் வாங்குவது ஒரு வேலையே அல்ல.  அவ்வளவே ,ப்ளே ஸ்கூல் ரெடி. இதில் ஹோட்டல் ரூம் டாரிஃப் போல வித் ஏசி/ விதௌட் ஏசி வசதியும் உண்டு.

ப்ளே ஸ்கூல் கட்டணமும் எல்கேஜிக்கு  சளைத்தது   அல்ல. என்சான்டிங்  எல்வ்ஸ், சீசேம் ஸ்ட்ரீட், ஜங்கிள் சஃபாரி, ஸ்ப்ரிங் ப்லாசம்...என்றெல்லாம்  ஸ்டைலாக   ஆங்கிலத்தில் பெயரை வைத்துக்கொண்டு நிறைய ஃபீஸ்  வசூலித்தால்  தானே   மரியாதை?எல்கேஜி டெர்ம்  பீஸ் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியின்  வருடாந்திர  காலேஜ் பீஸ் அளவுக்கு இருக்கும்  போது  ப்ளே ஸ்கூலில் எல்கேஜி அளவுக்கு கூட பீஸ் இல்லையென்றால் எப்படி?குறைந்தது முப்பதிலிருந்து  நாற்பதாயிரம்  வரை  சர்வ சாதரணமாக வாங்குகிறார்கள் . ரெசீப்ட்டும் தருவார்கள். ஆனால் ஒரு டயபர் மாற்றினால் கூட மேடம் நேத்து உங்க சன்னுக்கு டயபர் சேன்ஜ் பண்ணினோம், ரீப்ளேஸ் பண்ணிடுங்க என்று நுனி நாக்கு ஆங்கிலத்தில் பட்டரில் ஜாம் தடவுவார்கள்.

இதை எல்லாம் சொல்லுவதால் ப்ளே ஸ்கூலில் குழந்தையை போடுவது சரி என்றோ தவறு என்றோ எந்த தீர்ப்பும் சொல்லவரவில்லை. ஏனென்றால் ஆரம்பத்திலேயே சொன்னது போல்  நானும் இதே குட்டையில் ஊறிய ஒரு சுயநல மட்டை தான். என் பிள்ளையும் நான் சொன்ன ஏதோ ஒரு காரணத்திற்காக இரண்டரை வயதிலிருந்தே ப்ளே ஸ்கூல் செல்கிறான்.அவன் எழுத படிக்க கற்றுக்கொண்டானோ இல்லையோ தெளிவாக பேசவும், மற்றவர்களோடு பழகவும், சேர்ந்து விளையாடவும் ஓரளவேனும் தெளிவடைந்துள்ளான் என்று நிச்சயமாக சொல்ல முடியும்.எல்கேஜிக்கு வேறு ரெகுலர் பள்ளிக்கு அனுப்புவதில் சிரமமிருக்காது என்றே நம்புகிறேன். ஆனால் என்ன,  அதே அழகான கிளாஸ் மிஸ்ஸ கேட்பான். சமாளிக்கணும் ! 

8 comments:

ரோகிணிசிவா said...

Daya va naanum play school vidanuminu yosika main kaaranam,enaku rendu mani neram rest kidaikum,and dependence kuraiyum,enakum avanukum.
Enna vittu avan iruka maatan nu solratha vida ennala avana pirya mudiyathu ;)

அருணாவின் பக்கங்கள். said...

Had been in the same situation rohini:-)

அமர பாரதி said...

Well Said Aruna. Peer pressure is an important factor for this. You have to put your kid in paly school when your neighbours do. Nice writeup.

அருணாவின் பக்கங்கள். said...

Thank you Sivaram:-)

மரப்பசு said...

உண்மை மிகச்சிறிய வசதிகளை கொண்ட ப்ளே ஸ்கூல்கள் கட்டணம் மட்டும் அதிகம் சொல்வது கண்டு பல முறை எரிச்சலடைந்திருக்கிறேன்.என் மகள் புத்தகங்களில் பொம்மை பார்த்தால் அழாமல் இருப்பாள்.அதனால் அதை காட்டுங்கள் என்று ஹைதிராபாத்தில் ஒரு ஸ்கூலில் சொன்னேன்.புத்தகங்கள் எங்களிடம் இருக்கிறதுதான்.நல்ல புத்தகங்கள்தான் அவை,மிகச் சுவாரஸ்யமானவைதான்.ஆனால் எங்கள் ஸ்கூல் விதிப்படி பிர்.கே.ஜிக்குத்தான் அதை பொம்மை பார்க்க கொடுப்போம்.பிளே குரூப்புக்கு அல்ல என்றார் ஒரு அழகிய ஆசிரியை. நானும் ஆமாம் இதெல்லாம் பெரிய சட்டங்கள்.மீறினால் மிகப்பெரிய தண்டனை கிடைக்கும்.உங்கள் புத்தகங்களை பத்திரமாக நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன் :)

Jayanthi said...

Play schools are good business everywhere....well written facts... I did the same mistake for my second child at age of 2 yrs .... But later realized that although kids enjoy the environment, attractive play and socializing with others, their body is not yet ready for school...continuous sickness prevailed which is when I
realized my mistake and withdrew her immediately from school.....earlier when we were kids family was big ..there were so many cousins and people around us,so our parents never bothered so much on such things of child play
and enjoyment.... but situations r different now ... We really rear kids up like a job ... Taking care of them, spending time with them, playing with them has all become sheer necessity bec our families have shrunken in size... Two kids or one kid in each family .... Our siblings are also one or two ... So it's a small
Small world but yet management becomes very tough...:-)

அருணாவின் பக்கங்கள். said...

They have so many such stupid rules vijay.

அருணாவின் பக்கங்கள். said...

Thank you jayanthi. We rear kids up like a job- so true!