Saturday 7 December 2013

டிரைவிங் #1




எனக்கும் டிரைவிங்குக்கும் அப்படி ஒரு  ஏழாம் பொருத்தம் சிறுவயதிலிருந்தே!

 எனக்கு பெரிய சைக்கிள் பழகி விட்டது எங்கள் எதிர் வீட்டு அண்ணன். சைக்கிள் பழகிய புதிதில் நன்றாக ஓட்ட  மட்டுமே தெரியும் ஆனால் ஏற இறங்க வராது. யாரவது சைக்கிளை பிடித்துக் கொண்டால் தான் இறங்க வரும். 

பழகிய புதிதில் அண்ணன் ஏற்றி விட வண்டி ஒட்டிக்கொண்டிருந்தேன்... ஒரு தெருவில் நுழைந்து அடுத்த தெரு வழியாக வருவேன் எங்கும் நிற்காமல்.  அண்ணன் ஏற்றி விட்ட இடத்தில் எனக்காக காத்துக்கொண்டு இருப்பார், இறக்கி விட.
அவ்வாறு ஒரு நாள் பெரிய சைக்கிளில் அடுத்த தெரு சுற்றி வரும்போது அண்ணனைக் காணவில்லை. இன்னொரு சுற்று போய் வந்தேன்.  அப்போதும் அவரைக் காணவில்லை. 

சரி எதையாவது தாங்கி பிடித்து குதித்து விடலாம் என்ற எண்ணத்தில் எதிர்வீட்டில் முடிந்து போன ஒரு விசேஷத்திற்காக இன்னும் கழட்டப்படாமல் கட்டி வைத்திருந்த  வாழைமரம் கண்ணில் பட்டது. மெதுவாக ஒட்டி வாழைமரம் அருகில் வந்ததும் அதை பற்றிக்கொண்டேன்.ஆனால் ஒரே நேரத்தில் வாழைமரத்தையும் சைக்கிளையும்  விட்டு குதிக்கத் தெரியவில்லை. மரத்தை இறுகப்பற்றிக் கொண்டு கால்களைத் தூக்கியவுடன் சைக்கிள் கீழே விழுந்து விட்டது....நான் மட்டும்  வாழைமரத்தை கட்டிக்கொண்டு குதிக்கவோ சறுக்கி இறங்கவோ பயந்துக்கொண்டு  குரங்கு மாதிரி தொங்கிக் கொண்டிருந்தேன்! 

தெருவிலும் அவ்வளவு ஆள் நடமாட்டம் இல்லாத நேரமது. என்னைக் கடந்து சென்ற ஒரு சிலரும் நான் வாழைப்பழம் பறிக்க முயற்சி செய்வதாகவே நினைத்திருப்பர் போல... இதுல ஏறி ஏம்மா குட்டி விளையாடுற என்ற பார்வையுடனே நிற்காமல் சென்றனர்.  

தெருவில் போவோர் உதவாததர்க்கு மற்றுமொரு காரணம்  என்னுடைய திமிரு தான். இறக்கி விடுங்க என்று யாரையாவது கேட்டிருக்க வேண்டும்.செய்யவில்லை.கத்திக்  கூப்பாடு போடவும் இல்லை.பழம் பறிக்க ஏறிய  அறியாப்பிள்ளை போலவே திருட்டு முழியுடன் சத்தமில்லாமல்  டிரைவிங்# 1

எனக்கும் டிரைவிங்குக்கும் அப்படி ஒரு  ஏழாம் பொருத்தம் சிறுவயதிலிருந்தே!

 எனக்கு பெரிய சைக்கிள் பழகி விட்டது எங்கள் எதிர் வீட்டு அண்ணன். சைக்கிள் பழகிய புதிதில் நன்றாக ஓட்ட  மட்டுமே தெரியும் ஆனால் ஏற இறங்க வராது. யாரவது சைக்கிளை பிடித்துக் கொண்டால் தான் இறங்க வரும். 

பழகிய புதிதில் அண்ணன் ஏற்றி விட வண்டி ஒட்டிக்கொண்டிருந்தேன்... ஒரு தெருவில் நுழைந்து அடுத்த தெரு வழியாக வருவேன் எங்கும் நிற்காமல்.  அண்ணன் ஏற்றி விட்ட இடத்தில் எனக்காக காத்துக்கொண்டு இருப்பார், இறக்கி விட.
அவ்வாறு ஒரு நாள் பெரிய சைக்கிளில் அடுத்த தெரு சுற்றி வரும்போது அண்ணனைக் காணவில்லை. இன்னொரு சுற்று போய் வந்தேன்.  அப்போதும் அவரைக் காணவில்லை. 

சரி எதையாவது தாங்கி பிடித்து குதித்து விடலாம் என்ற எண்ணத்தில் எதிர்வீட்டில் முடிந்து போன ஒரு விசேஷத்திற்காக இன்னும் கழட்டப்படாமல் கட்டி வைத்திருந்த  வாழைமரம் கண்ணில் பட்டது. மெதுவாக ஒட்டி வாழைமரம் அருகில் வந்ததும் அதை பற்றிக்கொண்டேன்.ஆனால் ஒரே நேரத்தில் வாழைமரத்தையும் சைக்கிளையும்  விட்டு குதிக்கத் தெரியவில்லை. மரத்தை இறுகப்பற்றிக் கொண்டு கால்களைத் தூக்கியவுடன் சைக்கிள் கீழே விழுந்து விட்டது....நான் மட்டும்  வாழைமரத்தை கட்டிக்கொண்டு குதிக்கவோ சறுக்கி இறங்கவோ பயந்துக்கொண்டு  குரங்கு மாதிரி தொங்கிக் கொண்டிருந்தேன்! 

தெருவிலும் அவ்வளவு ஆள் நடமாட்டம் இல்லாத நேரமது. என்னைக் கடந்து சென்ற ஒரு சிலரும் நான் வாழைப்பழம் பறிக்க முயற்சி செய்வதாகவே நினைத்திருப்பர் போல... இதுல ஏறி ஏம்மா குட்டி விளையாடுற என்ற பார்வையுடனே நிற்காமல் சென்றனர்.  

தெருவில் போவோர் உதவாததர்க்கு மற்றுமொரு காரணம்  என்னுடைய திமிரு தான். இறக்கி விடுங்க என்று யாரையாவது கேட்டிருக்க வேண்டும்.செய்யவில்லை.கத்திக்  கூப்பாடு போடவும் இல்லை.பழம் பறிக்க ஏறிய  அறியாப்பிள்ளை போலவே திருட்டு முழியுடன் சத்தமில்லாமல்  தொங்கிக் கொண்டிருந்தால் யார் வருவார் உதவ ?    

சும்மாங்காட்டி கட்டி நிறுத்தி வைத்திருந்த வாழைமரம் சிறுது நேரத்திலேயே ஆட்டம் கண்டு மரத்தோடு சேர்ந்து சைக்கிள் மேலேயே விழுந்தேன். விழுந்தவுடன் எழுந்து யாரவது பார்த்துவிட்டார்களா என்பதை உறுதி செய்துக் கொண்டு சத்தம் கேட்டு ஆள் வருவதற்குள் எழுந்து சைக்கிளை அங்கிருந்து உருட்டி வந்துவிட்டேன்.  பின்னரே எங்கே அடிப்பட்டது என்று தேடினேன்.பெரிய அடி எதுவும் இல்லாத காரணத்தினால் வீட்டிலும் சொல்லவில்லை.

ஆட மாட்டாதவளுக்கு  கூடம் பத்தல கணக்காக சரியாக ஏற இறங்க பழகாத என் தவறைக் காட்டிலும் எனக்காக காத்திருக்காத அண்ணன், சின்ன சைக்கிள்  இல்லாததால் உயரமான சைக்கிள் வாடகைக்கு தந்த சைக்கிள் கடைக்காரர்,எனக்கு உதவாமல் என்னைப் பார்த்து சிரித்திக்கொண்டே  கடந்து சென்றவர்கள், வாழைமரத்தை சரியாக கட்டாத விசேஷ வீட்டுக்காரர்கள் என எல்லார் மீதும் சரமாரியாக கோபம் வந்து திட்டித்தீர்த்தேன் மனதுக்குள்..அவமானம் தாங்காமல். 

சைக்கிளயும் வாழைமரத்தையும் பார்க்கும் போதெல்லாம் இந்த குரங்கு போஸை நினைத்து வெகு நாட்கள் சிரித்துக் கொண்டிருந்தேன்.   

பழைய நினைவுகளைக் கிளறியது வழக்கம் போல என் செல்ல வாண்டு தான்!
இன்று யோஹனுக்கு புஷ் ஸ்கூட்டர் பழகும் போது கால்  இடறி விழுந்தவன் அதே வேகத்தில் எழுந்தும் விட்டான்.எழுந்தவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு  மெதுவாக பின்னர் தனக்கு அடிப்பட்டதை ஆராய்ந்து ,சற்று யோசனைக்குப்பின் என்னைக் கண்டவுடன் 
அழ ஆரம்பித்தான்.

# யாரு பிள்ளை!

2 comments:

SEKAR said...

மிகச்சரளமான நடை!

அமர பாரதி said...

Nice. I have already read this in your facebook page.